search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ச்சி தோல்வி"

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வி அடைந்தார். #SimonaHalep #MadridOpen
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.


    கரோலினா

    மற்றொரு கால்இறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ஷரபோவாவை (ரஷியா) தோற்கடித்தார்.

    ஆண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.

    இதன் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6-4, 6-7 (4), 5-10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.   #SimonaHalep #MadridOpen
    ×